Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபருக்கு எதிராக ஐடிசி முன்பு கோஷம்: திபேத்தியர்கள் கைது!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:34 IST)
சீன அதிபருக்கு எதிராக சென்னை ஐடிசி ஓட்டல் முன்பு கோஷமிட்ட திபேத்தியர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் அதிபர் தங்க இருக்கும் ஐடிசி ஓட்டல் முதல் மாமல்லபுரம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சீன அதிபருக்கு எதிராக திபேத்தியர்கள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலால் பல இடங்களில் திபேத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் சீன அதிபர் சென்னை வர உள்ளார். இந்நிலையில் பலத்த காவல்களையும் மீறி கிண்டி ஐடிசி ஓட்டல் வந்த திபேத்தியர்கள் ஐந்து பேர் சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்திருக்கின்றனர்.

இதனால் ஐடிசி ஓட்டல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments