Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபருக்கு எதிராக ஐடிசி முன்பு கோஷம்: திபேத்தியர்கள் கைது!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:34 IST)
சீன அதிபருக்கு எதிராக சென்னை ஐடிசி ஓட்டல் முன்பு கோஷமிட்ட திபேத்தியர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் அதிபர் தங்க இருக்கும் ஐடிசி ஓட்டல் முதல் மாமல்லபுரம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சீன அதிபருக்கு எதிராக திபேத்தியர்கள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலால் பல இடங்களில் திபேத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் சீன அதிபர் சென்னை வர உள்ளார். இந்நிலையில் பலத்த காவல்களையும் மீறி கிண்டி ஐடிசி ஓட்டல் வந்த திபேத்தியர்கள் ஐந்து பேர் சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்திருக்கின்றனர்.

இதனால் ஐடிசி ஓட்டல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments