Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்: என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:44 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அன்று இரவுக்குள் கிட்டத்தட்ட முடிவு தெரிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும் நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று மாலை 4:30 மணி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை செய்தனர் என்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்.! ஒப்புக்கொண்ட மத்திய அரசு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments