Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 11.30 மணிக்கு முடிவுகள்: தேர்தல் ஆணையம்..!

2 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:  11.30 மணிக்கு முடிவுகள்: தேர்தல் ஆணையம்..!

Siva

, ஞாயிறு, 2 ஜூன் 2024 (08:18 IST)
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மக்களவை தேர்தலுடன் அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
 
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அருணாச்ச பிரதேசத்தில்  24 இடங்களில் நடைபெறும் வாக்கு  எண்ணிக்கை நடைபெறுவதாகவும், அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 11.30 மணிக்கு தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல் சிக்கிம் மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரங்களில் இந்த மாநிலத்தில் பதிவான சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது ஜூன் நான்காம் தேதி இந்தியா முழுவதும் பதிவான பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அன்றைய இரவே கிட்டத்தட்ட புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. 
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!