Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சக்கட்ட பரபரப்பில் சபரிமலை: 2,300 போலீசார் குவிப்பு

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (08:30 IST)
சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுவதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் 4000 பேரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுவதால் சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது ஒருபுறம் இருக்க பெண்களை கோவிலுக்குள் அனுமதி அளிக்கக்கூடாது என கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments