Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஞ்சின் இல்லாமல் 10 கிமீ ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில்: வைரல் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (13:17 IST)
ஒசிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் 10 கிமீ தூரம் வரை சென்றுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிட்லாகார் என்ற ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 
ரிவர்ஸ் எடுப்பதற்காக ரயிலில் இருந்து எஞ்சினை பிரித்துள்ளனர். ஆனால் ரயில் வந்த வேகத்தில் பெட்டிகள் மட்டும் பிரிந்து வேகமாக ஓட ஆரம்பித்துள்ளது. 
 
இந்த ரயில் பத்து கிலோ மீட்டருக்கு இப்படியே வேகமாக ஓடி இருக்கிறது. காலை பத்து மணிக்கு துவங்கிய ரயில் 1 மணி வரை நிற்காமல் சென்றுள்ளது. 
 
இந்த ரயில் தானாக வேகம் குறையும் வரை காத்திருந்துள்ளனர். இதற்காக அந்த ரயில் வரும் பாதையை சரி செய்து மற்ற ரயில்களை மாற்றி விட்டு உள்ளனர். 
 
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெட்டிகளில் இருக்கும் தனிப்பட்ட பிரேக்குகளை பயன்படுத்தாததால் இப்படி நடந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments