Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திற்கு வழி விடாமல் நின்ற கார்! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:14 IST)
டெல்லி விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட இருந்த நிலையில் கார் ஒன்று வழியை மறித்து நின்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த சில காலமாக இண்டிகோ நிறுவன விமானங்கள் தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த மாதம் அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த விமானம் கோளாறு காரணமாக கராச்சியில் இறங்கியது. அதுபோல அசாம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது டெல்லியில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று இன்று பாட்னா செல்ல இருந்தது.

இந்நிலையில் விமானத்தின் முன்பகுதியில் மாருதி கார் ஒன்று பழுதடைந்து நின்றதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான அதிகாரிகளும் விமானத்தை நகர்த்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments