Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை: மருத்துவமனையில் அனுமதி

Monkey Pox
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:52 IST)
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
 
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது. 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது மேலும்  ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி: மாற்று இடத்தில் நேரடி வகுப்பா?