Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

Prasanth Karthick
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:15 IST)

லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கரை குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

கடந்த 2023ம் ஆண்டில் லண்டன் பயணம் சென்ற ராகுல்காந்தி, அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சாவர்க்கர் தான் எழுதிய புத்தகத்தில், தானும் தனது நண்பர்களும் இஸ்லாமிய நபர் ஒருவரை தாக்கியதாகவும், அதில் மகிழ்ந்ததாகவும் எழுதியுள்ளதாக பேசியிருக்கிறார்.

 

ஆனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும், அப்படியாக புத்தகத்தின் எந்த பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
 

ALSO READ: சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!
 

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 23ம் தேதியன்று விசாரணைக்காக புனே சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

அடுத்த கட்டுரையில்
Show comments