Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:07 IST)
சபரிமலையில் இந்த ஆண்டு, இணையதள வழியாக பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே மண்டல மற்றும் மகர பூஜை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கேரளாவில் உள்ள சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது, இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், நடப்பாண்டு பூஜை காலத்தில், இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தினமும் அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும், இணைய முன்பதிவின்போது யாத்திரை பாதையை தேர்வு செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள், இணையத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments