Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

Advertiesment
Ragul Gandhi

Senthil Velan

, சனி, 28 செப்டம்பர் 2024 (18:32 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
 
மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இலங்கை கடற்படையால் கடந்த 21ஆம் தேதி கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
இலங்கை அதிகாரிகளுடன் பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்