1940ஆம் ஆண்டுக்கு பின் இன்று தான்.. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் குறித்த தகவல்..!

Mahendran
புதன், 24 செப்டம்பர் 2025 (12:04 IST)
பிகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் இன்று காலை தொடங்கியது. 1940ஆம் ஆண்டுக்கு பிறகு, பிகாரில் நடைபெறும் முதல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். 
 
இந்த கூட்டத்தில் பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் என்றும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த 2023-ல் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், அங்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தை தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல், பிகாரிலும் இந்த மாநாடு வெற்றிக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments