Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்: காங்கிரஸ் பிரபலம்..!

Advertiesment
சாம் பிட்ரோடா

Mahendran

, வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (16:28 IST)
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு சென்றபோது, தான் சொந்த நாட்டில் இருப்பதை போலவே உணர்ந்ததாகக் காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில்  செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில் பேசியதாவது:
 
நமது வெளியுறவு கொள்கை முதலில் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நான் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு நான் ஒருபோதும் வெளிநாட்டில் இருப்பதாக உணர்ந்ததில்லை, சொந்த வீட்டில் இருப்பதை போலவே உணர்ந்தேன்."
 
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக பாஜக செய்யும் பிரச்சாரங்கள் போலியானவை. மோடி விஸ்வ குரு அல்ல. நமது அடுத்த தலைமுறையினரை தேர்தல்கள் அதிகம் பாதிக்கின்றன. ராகுல் காந்தியின் பேச்சுகள் உண்மையானவை. ஆனால், அவர் ஒருவரால் மட்டும் இதை செய்ய முடியாது. இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஜனநாயகத்தை காக்க ராகுல் காந்தியின் குரலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்."
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 பானிபூரி குறைவாக கொடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.. பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!