இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்க ஊடுருவல் தான் காரணம்: அமித்ஷா சர்ச்சை கருத்து..!

Siva
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (16:35 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து முன்வைத்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, 1951 முதல் 2011 வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் மக்கள்தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்துக்களின் மக்கள்தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்த விகிதாச்சார மாற்றத்திற்கு காரணம், பிறப்புக்குறைவு அல்ல; மாறாக பிரிவினையை தொடர்ந்து இந்தியாவுக்குள் அந்நியர்களின் ஊடுருவலும் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமுமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
1951-ல் 84 சதவீதமாக இருந்த இந்துக்களின் பங்கு 2011-ல் 4.5 சதவீதம் குறைந்ததையும், 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் பங்கு 24.6 சதவீதம் அதிகரித்ததையும் அவர் ஒப்பிட்டார்.
 
அமித்ஷாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ், மத்திய உள்துறை அமைச்சராக கடந்த 11 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அவர், எல்லை பாதுகாப்பையும் ஊடுருவலை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து அமித்ஷா இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments