Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 2 நாள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 2 நாள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:20 IST)
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை பெங்களூர் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அரக்கோணம் அருகே ரயில் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையிலான ஏற்காடு விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டுறவு வங்கி கடன்: திங்கள் முதல் நகைகள் திருப்பி தரப்படும்!