Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுறவு வங்கி கடன்: திங்கள் முதல் நகைகள் திருப்பி தரப்படும்!

கூட்டுறவு வங்கி கடன்: திங்கள் முதல் நகைகள் திருப்பி தரப்படும்!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:19 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைக்கப்பட்டு நகை கடன் வாங்கியவர்களுக்கு நாளை முதல் நகைகள் திருப்பி அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது இதுகுறித்து அரசு ஆணையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைத்த நகைகளை திங்கட்கிழமை முதல் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் பரவல்: முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்