Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம்!

ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம்!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:04 IST)
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர்.
 
இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதிவானது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதில் குணமானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் தொற்று அதிகமாக உள்ளது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வார் ரூம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கதேசத்தில் மூன்றடுக்கு படகில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு