Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராகிறார் சந்திரசேகரராவ்: நாளை பதவியேற்பு விழா

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (07:56 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் கட்சி, ஆட்சியின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை சந்தித்தது. இந்த முடிவு தவறு என ஒருசில தலைவர்கள் கருத்து கூறியபோதிலும் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல்வரின் முடிவு சரியானதுதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் சந்திரசேகரராவ் அவர்களின் டி.ஆர்.எஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 60 தொகுதிகள் இருந்தாலே போதுமானது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஃபார்முலா, தெலுங்கானாவில் எடுபடவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி

இந்த நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கவுள்ளதாகவும், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தங்கு தடையின்றி மீண்டும் தொடரும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments