Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து மாநில தேர்தல்: ஆட்சிகளை பிடிப்பது யார் யார்?

ஐந்து மாநில தேர்தல்: ஆட்சிகளை பிடிப்பது யார் யார்?
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (07:48 IST)
ஒரு பாராளுமன்ற மினி தேர்தல் போல் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்து இன்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜக, கடும் போட்டியை கொடுக்கும் என கருதப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவை பொருத்தே வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமையும் என்பதும், பாஜகவின் செல்வாக்கு எந்த நிலையில் இருக்கின்றது என்பதையும் அறிய முடியும் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு ஒரு கெளரவ பிரச்சனையாகும், காங்கிரஸ் கட்சிக்கு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையிலான ஒரு நம்பிக்கையாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

webdunia
இன்னும் சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளதை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தந்தி டிவி' ரங்கராஜ் பாண்டே ராஜினாமாவா?