Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 கிமீ காரால் இழுத்து செல்லப்பட்ட பெண் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (13:08 IST)
டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் அஞ்சலி என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று அவர் மீது மோதி 12 கிலோமீட்டர் வரை அவரை இழுத்துச் சென்றது. அந்த பெண் பரிதாபமாக பலியான நிலையில் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
 தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் தீபக் தான் காரை ஓட்டி வந்ததாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது விசாரணையில் காரை ஓட்டியது தீபக் அல்ல என்றும் அவர் காரிலேயே இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
 
காரை ஓட்டியது அமீத் கண்ணா என்றும் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் தீபக் என்ற ஒருவரை செட்டப் செய்து காவல் துறையில் தான் காரை ஓட்டியதாக சொல்ல சொன்னதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
தீபக்கின் செல்போன் விவரங்கள் ஆய்வு செய்தபோது அவர் அன்றைய தினம் முழுவதும் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் மாற்றிய மற்ற நான்கு பேர்கள் மீது கடும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments