Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அட்டை இருக்கும்போது மக்கள் ஐடி எதற்கு? சீமான் கேள்வி

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (13:00 IST)
குடும்ப அடையாள அட்டை இருக்கும் நிலையில் மக்கள் ஐடி எதற்கு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் உள்ள 95 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கி உள்ளது என்பதும் இந்த ஆதார் அட்டை குடும்ப அட்டை, வங்கி கணக்கு, எலக்ட்ரிக் எண் என அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு மக்கள் ஐடி என்ற புதிய அடையாள அட்டையை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு இந்த மக்கள் ஐடி அவசியம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இது வீண் செலவு என அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கூறிய போது தமிழ்நாட்டிற்கு என தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை என்று தெரிவித்தார். மேலும் குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ஐடி என்ற தனி அடையாள அட்டை எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments