போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

Mahendran
செவ்வாய், 18 நவம்பர் 2025 (10:56 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள், குறிப்பாக பஞ்சாப் பகுதிகளில், போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் முயற்சிகளை முறியடிக்கும் விதமாக, நடப்பாண்டில் 255 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
 
அமிர்தசரஸில் உள்ள BSF மண்டலத் தலைவர் அதுல் ஃபுல்சேல் அளித்த தகவலின்படி: குளிர்காலப் பனிமூட்டத்தை பயன்படுத்தி நடக்கும் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க, BSF மற்றும் பஞ்சாப் காவல்துறை இணைந்து கூட்டு சோதனைகளையும், சிறப்பு கண்காணிப்பு உபகரணங்களையும் பயன்படுத்துகின்றன.
 
அழிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் கடத்த முயன்ற 329 கிலோ ஹெராயின், 16 கிலோ ஐஸ் 191 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள் உட்பட 10 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊடுருவ முயன்ற 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 19 பாகிஸ்தானியர்கள் மற்றும் 240 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் தீவிர நடவடிக்கையால், எல்லையில் நடக்கும் கடத்தல் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருப்பதியில் தங்கும் அறைகள் என போலி விளம்பரம்.. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments