Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய குடோன்! தூக்கி வீசப்பட்ட மக்கள்! - காசர்கோடு திருவிழாவின் அதிர்ச்சி வீடியோ!

Prasanth Karthick
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (11:11 IST)

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சுதம்பலம் வீரராகவ கோவிலில் காளியாட்ட திருவிழா நேற்றுக் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பட்டாசுகள், வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அதில் தவறுதலாக சில பட்டாசுகள் பறந்து சென்று, பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள்ளேயே விழுந்து வெடித்துள்ளது.

 

இதனால் குடோன் அருகே நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெடிவிபத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 

ALSO READ: பூமிக்கு திரும்ப முடியாத நிலை! விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சுனிதா வில்லியம்ஸ்!
 

இந்த விபத்தில் 154 பேர் காயமடைந்துள்ள நிலையில், 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பட்டாசு விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments