Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொண்டர்கள் என்ன பிச்சைக்காரர்களா? தூக்கி எறியப்படும் தண்ணீர் பாட்டில்..!

தொண்டர்கள் என்ன பிச்சைக்காரர்களா? தூக்கி எறியப்படும் தண்ணீர் பாட்டில்..!

Siva

, ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (13:58 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு வந்த தொண்டர்களுக்கு நிர்வாகிகள் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட நிலையில், உணவு, குடிநீர் உள்பட அனைத்து பொருட்களும் தொண்டர்களுக்கு சரியாக வழங்கப்பட வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டார்.
 
ஆனால் விஜய்யின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், தண்ணீர் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்களை வரவழைத்து தொண்டர்களுக்கு வழங்கியபோது, தொண்டர்கள் முண்டியடித்ததால் அந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், “தொண்டர்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஏன் தூக்கி எறிகிறார்கள்?” என விமர்சனம் செய்யப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த விஜய் நிர்வாகிகளை கண்டித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக மாநாடுக்கு வந்தவர்களின் உயிரிழப்பு 3ஆக உயர்வு.. தலைவர் மட்டும் ஏசி கேரவனில்..!