Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன்: பட்ஜெட்டில் ரூ.3600 கோடி ஒதுக்கீடு..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (18:57 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் இதற்காக பட்ஜெட்டில் 3600 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது என்பதும் இம்மாநிலத்தில் நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 6.90 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. குறிப்பாக சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பட்ஜெட்டில் ரூபாய் 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் ஜலதீவன் திட்டத்திற்கு 250 கோடியும் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித் தருவதற்கு 2.26 கோடியும் குடிநீர் வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments