மீண்டும் 61,000 நெருங்கும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:23 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் அதிகரித்து 60,952 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருக்கும் நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் அதிகரித்து 60,952 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 
 
அதோடு தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,156 புள்ளிகளில் வர்த்தகமாகியிருக்கிறது. நேற்றும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments