Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர் பட்டியல் விரைவில் ; நான் போட்டியிடுவேன் – தமிழிசை பதில் !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:01 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாஜகவின் வேட்பாளர்கள் இன்று மாலை அல்லது நாளை அற்விக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விகு ‘ ஆம் நான் போட்டியிட அதிக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறினார். மேலும் கட்சி ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுவேன் எனப் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments