Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு – திருமா வளவன் , கிருஷ்ணசாமி …?

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (13:33 IST)
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் இப்போது வேட்புமனுக்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.  இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன. இதற்காக வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்தது.

கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எனப் பலர் ஆர்வமாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.  39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 1575 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 18 தொகுதி இடைத் தேர்தலுக்காக 77 பெண்கள், 431 ஆண்கள் என மொத்தம் 508 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் பாமக வேட்பாளர் சாம்பால் ஆகிய இருவரின் வேட்புமனுக்களில் சில தகவல்கள் விடுபட்டுள்ளதால் அவர்களின் வேட்புமனுக்களை பரிசீலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதேப்போல மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments