அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

Prasanth K
வெள்ளி, 24 அக்டோபர் 2025 (12:37 IST)

அதிக நேரம் யூட்யூபில் ஷார்ட்ஸ் பார்க்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த யூட்யூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

உலகம் முழுவதும் மக்களிடையே யூட்யூப் பிரபலமாக உள்ள நிலையில் மக்கள் அதில் பல வீடியோக்களை பார்க்கின்றனர். முக்கியமாக யூட்யூப் ஷார்ட்ஸ் எனப்படும் 1 நிமிட அளவு கொண்ட குறு வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 

 

நேரம் போவது தெரியாமல் தொடர்ந்து ஸ்வைப் செய்து ஷார்ட்ஸ் பார்த்துக் கொண்டே இருப்பதால் மன உளைச்சல், கவனச்சிதறல், நினைவுக்கூறும் தன்மை குறைதல் என பல பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பழக்கம் சிறுவர்கள், குழந்தைகளிடையே அதிகம் உள்ளது.

 

இதை கவனத்தில் கொண்டு யூட்யூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எவ்வளவு நேரம் ஷார்ட்ஸ் பார்க்க விரும்புகிறோமோ அதை செட் செய்து வைத்து விட்டால், தொடர்ந்து ஷார்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த கால அளவை நெருங்கியதும் வீடியோ பாஸ் ஆவதுடன், கால அளவை தாண்டி விட்டதாக அறிவிப்பும் வரும். இதனால் ஷார்ட்ஸ் மோகத்தில் உள்ளவர்கள் தங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் இருக்க இந்த வசதியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments