Webdunia - Bharat's app for daily news and videos

Install App

171 ரன்கள் இலக்கு: 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த சிஎஸ்கே

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (22:16 IST)
இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 15 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய மும்பை அணி, கடைசி ஐந்து ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடி 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்தது. குறிப்பாக 20 வது ஓவரை வீசிய பிராவோ ஓவரில் 29 ரன்கள் அடிக்கப்பட்டது.
 
ஹிரித்திக் பாண்ட்யா அபாரமாக விளையாடி 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்., சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருணால் பாண்ட்யா 42 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் சாஹர், மோஹித் சர்மா, தாஹிர், ஜடேஜா, பிராவோ தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 171 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் ஆட்டமிழந்தார். எனவே 1.2 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 6 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments