ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

Prasanth Karthick
புதன், 21 மே 2025 (10:31 IST)

பரபரப்பான ஐபிஎல் சீசன் ப்ளே ஆஃபை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெறும் MI vs DC போட்டி கத்திமுனை போட்டியாக அமைந்துள்ளது.

 

நடப்பு ஐபிஎல் சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் ப்ளே ஆப் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய அணிகளில் இன்னும் ஒரு அணி மட்டுமே ப்ளே ஆப்க்குள் நுழைய முடியும் என்ற நிலையில் அந்த ஒரு இடத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று போட்டி நடைபெறுகிறது.

 

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து ப்ளே ஆப்க்கு தகுதி பெற முடியும். தற்போது டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், மும்பை அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியையும் எதிர்கொண்டு வென்றாக வேண்டும்.

 

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வென்றால் 16 புள்ளிகளை பெறும். இதில் வெற்றியை தவறவிட்டு டெல்லி அணி அடுத்த போட்டியில் பஞ்சாபை வென்றாலும் கூட 15 புள்ளிகளே கிடைத்து ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிடும். மும்பை அணி இந்த போட்டியில் தோற்றாலும் பஞ்சாப் அணியுடனான மேட்ச்சில் வென்றால் ப்ளே ஆப் செல்ல வாய்ப்பிருக்கும். ஆனால் டெல்லி அணி பஞ்சாப் போட்டியில் தோற்க வேண்டும்.

 

இப்படியான கத்திமுனை தருணத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் இன்றைய போட்டிதான் இரு அணிகளுக்கும் இருக்கும் கடைசி வாய்ப்பாக உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments