Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

vinoth
வியாழன், 3 ஏப்ரல் 2025 (06:40 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை 18 சீசன்கள் நடந்துள்ள நிலையில் அந்த அணிக்கு 17 பேர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். தற்போது 17 ஆவது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதை இப்போது ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். அவர் தலைமையில் பஞ்சாப் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்குத் தலைமை தாங்கிய அவர் அதில் 6 போட்டிகளைத் தொடர்ந்து வென்றார், தற்போது பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளை வென்றுள்ள நிலையில் மொத்தம் 8 விக்கெட்களை தொடர்ந்து வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று கம்பீர் முதல் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments