Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாதனை படைக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:40 IST)
இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடர் வரும்  ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இத்தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா  51 டி 20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 39 வெற்றிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக 148 டி 20 போட்டிகளில் விளையாடி  இதுவரை 3853 ரன்கள் அடித்துள்ளார். இதில், 4 சதம் மற்றும் 29 அரைதங்கள் அடங்கும்.

மேலும், டி 20 போட்டிகளில் ரோகித் சர்மா 182 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் 18 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments