Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாதனை படைக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:40 IST)
இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடர் வரும்  ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இத்தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா  51 டி 20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 39 வெற்றிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக 148 டி 20 போட்டிகளில் விளையாடி  இதுவரை 3853 ரன்கள் அடித்துள்ளார். இதில், 4 சதம் மற்றும் 29 அரைதங்கள் அடங்கும்.

மேலும், டி 20 போட்டிகளில் ரோகித் சர்மா 182 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் 18 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

நான் இன்றைய போட்டியில் விளையாடியதே நகைச்சுவையானக் கதை… ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்த தகவல்!

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments