என் கையால அந்த கங்காருவ வெட்ட மாட்டேன்! – புதிய கேப்டன் ரஹானேவின் நேர்மை!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:57 IST)
ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர் ரஹானே செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு புதிய வீரர்களின் திறமை புகழப்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற ரஹானேவையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு இந்திய மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை திரும்பிய ரஹானேவுக்கும் மக்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்ட கேக்கில் கங்காரு பொம்மை இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவை வென்றதை அவர்களது நாட்டின் அடையாளமான கங்காருவோடு ஒப்பிடுவதாக அது இருந்தது.

இந்நிலையில் அந்த கேக்கை வெட்ட மாட்டேன் என ரஹானே மறுத்துள்ளார். இப்படியாக கேக்குகளை தயாரித்து வெட்டி ஒரு நாட்டை நாம் அவமானப்படுத்த கூடாது என்று கூறியுள்ள அவர், விளையாட்டோடு நாகரிகமும் அவசியம் என்பதை பலருக்கு உணர வைத்துள்ளதாக பலர் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments