எல்லாரையும் அனுப்பிட்டேன்.. நானும் கிளம்புறேன்! – கேப்டனாய் கடமையை செய்த தோனி

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:03 IST)
ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ரத்தான நிலையில் சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு இன்று புறப்படுகிறார் கேப்டன் தோனி.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஐபிஎல் அணி வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து அணி வீரர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களையும் டெல்லியிலிருந்து சார்ட்டர் விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் முதலாவதாக தனது அணி வீரர்கள் அனைவரும் தத்தமது ஊர்களுக்கு சென்றடையும் வரை தனது பயணத்தை தொடராமல் ஹோட்டலிலேயே தங்கியுள்ளார் கேப்டன் தோனி.

இன்று அனைத்து வீரர்களும் தங்களது ஊர்களுக்கு பத்திரமாக சென்றைடைந்த நிலையில் கேப்டன் தோனி இன்று சார்ட்டர் விமானம் மூலம் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments