Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்துக்கு பறந்த 8 வீரர்கள்… ஆஸி வீரர்கள் வெய்ட்டிங்- ஐபிஎல் அப்டேட்!

Advertiesment
இங்கிலாந்துக்கு பறந்த 8 வீரர்கள்… ஆஸி வீரர்கள் வெய்ட்டிங்- ஐபிஎல் அப்டேட்!
, வியாழன், 6 மே 2021 (08:14 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்களும் தாய்நாடு திரும்பியுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் 8 வீரர்கள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆஸி வீரர்கள் மே 14 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது என்ற விதியால் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி தொடங்குவது எப்போது? ஐபிஎல் சேர்மன் தகவல்!