சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

vinoth
புதன், 6 ஆகஸ்ட் 2025 (08:16 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான டி 20 போன்ற விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் உயிரைக் கொடுத்து பந்துவீசிய சிராஜ் 9 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து வீரர்களே பாராட்டு வார்த்தைகளால் மகுடம் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் கடைசி நாளில் புதுப்பந்து எடுப்பதற்காக நேரம் வந்தபோதும் ஏன் அதை செய்யாமல் பழைய பந்திலேயே வீசினீர்கள் என்ற கேள்விக்கு சிராஜ் அளித்துள்ள பதில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “பழைய பந்தால் என்னால் என்ன செய்ய முடியும் என்று சிலருக்குக் காட்ட விரும்பினேன்” எனப் பதிலளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது ‘அவரால் பழைய பந்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை’ என அப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments