தெலங்கானா காவல்துறையில் DSP பொறுப்பு… சிராஜுக்குக் கிடைத்த கௌரவம்!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (07:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால்  டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார். அவர் இடம்பெற்ற இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போதே தெலங்கானா மாநில முதல்வர் அவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சையும் அவர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தெலங்கானா மாநில காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது ஒரு கௌரவ பொறுப்பாக அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிராஜ், தெலங்கானா மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments