Publish Date: Sun, 06 Oct 2024 (15:57 IST)
Updated Date: Sun, 06 Oct 2024 (15:59 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்நிலையில் அவர் ஏலத்துக்கு வந்தால் அவரை எந்த அணி வாங்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர் லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எல்லாமே ஊகங்களாகவே உள்ளது.
இந்நிலையில் ஆர் சி பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இதுபற்றி பேசும்போது “ரோஹித் மட்டும் ஆர் சி பி அணிக்கு சென்றால், அது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு வந்ததை விட பெரிய நகர்வாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.