Publish Date: Wed, 02 Oct 2024 (08:12 IST)
Updated Date: Wed, 02 Oct 2024 (08:35 IST)
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வீரராக பாகிஸ்தானின் பாபர் அசாம் இருக்கிறார். கிட்டத்தட்ட அவரை அடுத்த விராட் கோலி என்று சொல்லுமளவுக்கு அவரின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து பல குளறுபடிகள் எழுந்துள்ளன.
அவர் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணியின் வியூகங்கள் கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றன. தொடர்ந்து பல போட்டிகளைத் தோற்ற, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றையேத் தாண்டவில்லை. அதனால் பாபர் அசாமின் கேப்டன்சி பறிக்க மூன்று பார்மெட்களுக்கும் மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த மார்ச்சில் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது பணிச்சுமை காரணமாக மீண்டும் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்குப் புதிய கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.