ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (07:18 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட் தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவருக்கு விரலில் காயமேற்பட்டதால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதே போல ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆல்ரவுண்டர் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியும் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் போது காயமடைந்துள்ளார். இதன் காரணமாக எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments