Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை கொரோனா ஏற்கனவே உலகம் முழுக்க பரவியிருக்கலாம்! – ஹூ மூத்த விஞ்ஞானி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:11 IST)
லண்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இத்தாலிக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற இருவருக்கும் இந்த வைரஸ் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லண்டனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “புதிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருவதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால் ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments