Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து – இந்தியா விமான சேவை ரத்து; பயணிகள் தனிமைப்படுத்தல்! – உஷார் நிலையில் இந்தியா!

இங்கிலாந்து – இந்தியா விமான சேவை ரத்து; பயணிகள் தனிமைப்படுத்தல்! – உஷார் நிலையில் இந்தியா!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:58 IST)
இங்கிலாந்தி கொரோனா வைரசின் புதிய வகை பரவல் தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகளை இந்தியா தனிமைப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இத்தாலிக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற இருவருக்கும் இந்த வைரஸ் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்திலிருந்து மும்பை விமானம் நிலையம் வந்த விமானத்த்தில் வந்த பயணிகளை அரசு தனிமைப்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?