Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (08:01 IST)
அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று ஆறு மாதம் கூட முழுதாக ஆகவில்லை என்ற நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் இறங்கியதால், அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், டிரம்பின் குடியுரிமை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக திடீரென கலவரம் பரவியது. சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நபர்களை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பாலஸ்தீன் ஆதரவாளர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாகவும், இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் பல தீக்கரையாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த போராட்டங்களை தீவிர இடதுசாரி செயல்பாடு என ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ள நிலையில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என அறிவித்த அவர், 2000 தேசிய பாதுகாப்பு படைவினரை நிலைமையை சரி செய்ய அனுப்பியுள்ளதாகவும், கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
தற்போது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments