காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் அவ்வப்போது கூறி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய - பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிட வாய்ப்பு இல்லை என்றுதான் கூறப்பட்டு வருகிறது.