Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா

Advertiesment
காஷ்மீர்

Mahendran

, வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:28 IST)
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் அவ்வப்போது கூறி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய - பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிட வாய்ப்பு இல்லை என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.. வதந்திகள் பரப்பப்படுகிறது.. செங்கோட்டையன் விளக்கம்