Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி! – கொரோனா தீவிர சிகிச்சைகள் தொடக்கம்!

அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி! – கொரோனா தீவிர சிகிச்சைகள் தொடக்கம்!
, சனி, 3 அக்டோபர் 2020 (08:58 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா ட்ரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இருவரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரொனாவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வால்டர் ரீட் மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போன்கள் பறிமுதல்; கிராமத்திற்கு சீல்! – ரகசியம் காக்கும் போலீஸ்!