Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (19:17 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் அவர்கள் இருவரும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது
 
இந்த அறிவிக்கும்படி சற்று முன்னர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஆகிவிட்டார் தயாநிதி அழகிரி: முதல் பட டைட்டில் அறிவிப்பு