Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவை தடுக்க ட்ரம்ப் நடவடிக்கையே எடுக்கல! – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கொரோனாவை தடுக்க ட்ரம்ப் நடவடிக்கையே எடுக்கல! – பொதுமக்கள் குற்றச்சாட்டு!
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:19 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அதிபர் ட்ரம்ப் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அமெரிக்கா அதிகமான பாதிப்புகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. உலக அளவிலான பாதிப்புகள் 2 கோடியை நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க செய்து ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவை தடுக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மொத்தமாக நடத்தப்பட்ட சர்வேயில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ட்ரம்ப் அரசாங்கம் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் ஜார்ஜ் ப்ளாயிட் கொலை வழக்கிலும் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் விடிய விடிய மழை: எந்தெந்த பகுதியில் வெளுத்து வாங்கியது?