Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அரசு மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (12:02 IST)
போராட்டத்தைக் கையாள முடியாமல் பாகிஸ்தான் அரசு பலவீனமாக உள்ளது என அமெரிக்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடர்பாக சமீபத்தில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மதத்தின் பெயரில் கட்டாய உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. போராட்டத்தில் கலவரம் வெடித்து 6 பேர் பலியாகினர்.
 
சட்ட திருத்தத்திற்கு காரணமான அமைச்சர் சாஹித் அமீத் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
 
அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த போராட்டம் வெளிச்சமிட்டு காட்டி உள்ளதாக விமர்சித்துள்ளார்.போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவு மோசமாக உள்ளது என்றார். போராட்டத்தால் பிரிவினைவாத அமைப்புகள் மேலும் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளார். அவ்வாறு ராணுவ புரட்சி ஏற்பட்டால், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு பாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments