Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இன்னும் அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை..!

Advertiesment
அமெரிக்கா - இந்தியா உறவு

Siva

, திங்கள், 8 செப்டம்பர் 2025 (09:29 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குபவர்களுக்கு  இரண்டாம் கட்ட வரிவிதிப்புக்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்கும் இந்தியாவை போன்ற நாடுகளையும் பாதிக்கக்கூடும்.
 
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா நடத்திய மிக பெரிய வான்வழித் தாக்குதலுக்கு பிறகு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. "ரஷ்யா அல்லது அதன் எண்ணெய் வாங்குபவர்கள் மீது புதிய சுற்று தடைகளுக்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டபோது, ட்ரம்ப், "ஆம், நான் தயார்" என்று சுருக்கமான பதிலளித்தார். அவரது இந்த கருத்து, போரை முடிவுக்குக்கொண்டுவர முடியாததால் அவரது நிர்வாகத்தில் அதிகரித்து வரும் விரக்தியை காட்டுகிறது. 
 
ஏற்கனவே, கடந்த மாதம் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகள் மீது 25% கூடுதல் வரி விதித்து, மொத்த இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்தியது. இந்தியா தனது தேசிய எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இன்னும் அதிக வரிவிதிப்போம் என்ற டிரம்பின் போக்கு துரதிஷ்டமானது என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!