Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி.. ஒரே நாளில் நடந்த மாற்றம்..!

Siva
திங்கள், 20 ஜனவரி 2025 (07:55 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் டிக் டாக் செயலி அமெரிக்காவில் செயல்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்க இருக்கும் நிலையில் தான் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் டிக் டாக் சேவைகளை பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதை அடுத்து மீண்டும் டிக் டாக் சேவை அமெரிக்காவில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரம்ப் முயற்சியால் டிக் டாக் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனமும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில்  170 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட டிக்டாக் சேவை நேற்று திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் டிக் டாக் செயலி செயல் பட அனுமதி அளிக்க போகும் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் ஒன்று டிக் டாக் செயலி அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் என்ற செய்தியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே டிக் டாக் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments